Saturday, May 21, 2011

எழுந்திராய் எந்திரா

தலைவா, முதன் முதலில் தமிழ் ரசிகர்களை தன தொண்டனாக்கிய முதல் அரசியல் அல்லாத தலைவன் நீயாகத்தான் இருக்க வேண்டும்.

நீ படங்களில் காக்கி சட்டையில் கோபமாக உறுமிய உறுமல்களைக்கண்டு நான் எனது 7 வயதில் வளர்ந்து உன்னைபோலவே போலீஸ் காரனாக மாறி கேடிப்பயல்களை பந்தாடி தண்டித்து திருத்த வேண்டும் என்று சபதமிட்டிருந்தேன். பாழாய்ப்போன சமூகமும் ரொம்ப பலசாலியான கேடிகளும் என் கனவை நினைவாக்க விடவில்ல. எனது நிறைவேறாத ஆசைக்குப் பழி வாங்கவோ என்னவோ தான் நீ இன்னும் பல அவதாரங்கள் எடுத்து பல பரிமாணங்களில் எதிரிகளைப்பறந்து பறந்து சுத்தி சுத்தி அடித்துக்கொண்டிருக்கிறாயோ என்னவோ..

Actualla இப்போ, அதாவது ஒரு 15வருஷங்களாக நான் உன் நடிப்புக்கு ரசிகனே இல்லை. கட்சி மாறிவிட்டேன என்று நீ கேட்கலாம். .

காதலின் தீபோமொன்று ஏற்றினாளே என்நெஞ்சில் என்று பாடிய உன் கம்பீரமும் அந்த long hair style உம, தீ படத்தில் உனது நடிப்பும், தில்லு முல்லுவில் நீ அடித்த காமெடி உம ஏனோ பின் வரும் மனிதன், ராஜாதி ராஜா, போன்ற படங்களில் காண முடிய வில்லை. அதன் பின்னர் நீ சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாய். ஏதோ நாயர் புடித்த புலி வால் போல தெரிந்தோ தெரியாமலோ நீயாகவோ அல்லது ரசிகர்களாகத் தோற்றுவித்த ஒரு மாயக்கண்ணாடியில் சிக்கிய சிங்கிள் சிங்கமாய் பல படங்கள் செய்தாய். தளபதி முதல் பாட்ஷாவிலிருந்து சிவாஜி வரை. ஏந்திரன் ஒரு வேறு equation அதனால் அதை இங்கே சேர்க்கவில்லை நான். producer களுக்கும் திரையரங்க முதலாளிகளுக்கும் உனக்கும் தான் பல கோடிகள் சேர்ந்தன. என்னதான் அதன் பின்னரும் நீ பேடிப்பயல்களை அடித்து உதைத்து நல்வழிப்படுத்திக்கொண்டிருந்தாலும் அந்த எண்பதுகளின் கோபக்கார இளைஞகனை அந்த சூப்பர் ஸ்டார் இமேஜ் குள் என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசி 15 வருடங்களாக நன் உனது நடிப்பின் ரசிகன் இல்லையே ஒழியே தனி மனித வாழ்கையில் இதே காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் ஆக ஆரம்பிதிருந்தாய். அது ஆன்மீக ஈடுபாடாக இருக்கட்டும், அரசியல் நடு நிலைமையாக இருக்கட்டும், ஏழைகளுக்கு உதவி செய்தலாக இருக்கட்டும், உன்னால் நஷ்டப்பட்ட திரைத்துரையினர்களுக்கு நஷ்டஈடு குடுத்ததாக இருக்கட்டும், பர்சனல் இமேஜ் கூடிக்கொண்டே வந்த அதே பொழுதில் உன் படங்கள் எல்லாம் stereo type ஆகா ஆகிக்கொண்டுவந்தன.

இதைப்புரிந்து அறிந்துகொண்டதலோ என்னவோ தான் ரசிகர்களுக்காக இல்லாமல் உனது திருப்திக்காக பாபா போன்ற படங்களில் நடித்தாய். But it was too deep and too
late for you to get out of your image trap.

உனது மகள்களின் வயதொத்த நடிகைகளுடன் டூயட் பாட ஆரம்பித்தாய். ஏனோ மனது ஒப்பவே இல்லை. இதை முதலில் நீ ஆரம்பிக்க வில்லை தான், உனக்கு முன்னரே பல ஸ்டார் ஹீரோக்கள் செய்தது தான், இருந்தாலும் நீ கட்டிய அந்த பர்சனல் இமேஜ் கு அது ஒப்பவில்லை. கருப்புதொலுக்கே ஒரு brand ambassador ஆக இருந்த நீ சிவாஜியில் வெள்ளைத் தோலுடன் உலா வந்தாய். இருந்தாலும் கோடிகள் கொட்டின, cut out க்கு பாலபிஷேகங்கள் தொடர்ந்தன, அரசியல் கட்சிகள் உன்னை தான் பிரசார பீரங்கியக்க விரும்பின.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெள்ளித்திரையிலும் வெளி விழாக்களிலும் கம்பிரமாகப்பார்த்த உன்னை நோயளியாகப்பார்க்க ரசிக நெஞ்சங்கள் ஒரு போதும் ஒப்பாது. அதனால் உன்னைக்கொண்ட நோயை உதறித்தள்ளி பழைய ரஜினியாக நீ வர எங்களது பிரார்த்தனைகள். நீ திரும்பி வந்து குழந்தைகளுடன் டூயட் பாடுவதைப் பார்க்க இல்லை, rana படத்தை முடித்துக்கொடுக்க இல்லை, அனால் White and White குர்தா பைஜாமாவில் திரையுலகின் வழிகாட்டியாக, ஒரு பெரியண்ணனாக இருந்து கொண்டு உன் பர்சனல் இமேஜ் வளர்த்து கொண்டே போய் ரசிகர்களின் மனதாகிய இமயமலையில் ஒரு அறிய இடத்தை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

Saturday, September 11, 2010

மொட்டை மாடி பருவம் - பாகம் 1

பல பேருக்கு தெரியுமா தெரியாதா எனக்குதேரில.. பள்ளி பருவம், கல்லுரி பருவம் போல மொட்டை மாடி பருவம் என்று ஒன்று உண்டு. ஸ்கூல் காலேஜ் முடிஞ்சா பொட்டிய கட்டிட்டு அடுத்தவேலய பாக்க போகணும் ஆனா இந்த மொட்டை மாடி பருவத்துக்கு அந்தமாதிரி no limitations .. இந்த மொட்டை மாடியனது வந்தாரை வாழவைக்கும் , காத்து வாங்க வைக்கும், தூங்க வைக்கும், வேடிக்கை பார்க்க வைக்கும், கிரிக்கெட் விளையாட வைக்கும் , இன்னும் என்னென்னெவோ செய்ய வைக்கும் ..

இந்த மொட்டை மாடி னாலே, ஞாபகத்துக்கு வரது இந்த நட்சத்ரங்கள என்றது, love -jodi love -jodi பாட்டு படறது, நிலா வைப்பாத்து சோறு ஊட்டறது இதெல்லாம் quite தேஞ்சு போன ரெகார்ட்ஸ்.. i டோன்ட் வான்ட் டு பிரேக் தோஸ் ரெகார்ட்ஸ்..

இந்த நட்சத்திரம் எண்ற ஜோலிக்கு நான் போனதே இல்ல, என்னா ஆரம்பத்திலேர்ந்தே கணக்குல நான் கொஞ்சம் இல்ல நிறையவே வீக், அது வேற டபுள் கவுன்டிங் ஆயிடுமோன்னு ஒரு பயம் வேற சோ அதா சாய்ஸ் ல வுடறது தான் பெட்டெர்.. இந்த மொட்ட மாடி பருவம் (MMP அப்டின்னு வெச்சுப்போம் செல்லமா...) ங்கறது எனக்கு ஒரு 8 வயசுலேந்து 25 வயசு வரை என்னை வளர்த்த பருவம். அதுக்கப்பறம் வளர்ந்த மாதிரி எனக்கு எள்ளளவும் doubte இல்ல .. ஏன் மொட்டை மாடி 25 வயசுக்கப்பறம் எங்கே போச்சு, யாராவது வடிவேலுவின் கிணற திருடினமாதிரி திருடிபோய் விட்டார்களா இதெல்லாம் நம்மை மெயின் ஸ்டோரி லேர்ந்து HIJACK பண்ணிவிடும் , as usual அதெல்லாம் freeya வுட்டுட்டுவோம்.

எங்க history miss சொல்லியிருக்காங்க side heading ஓட எழுதின தான் நல்ல மார்க் வரும்னு, better late than never , history miss historyஓட சேர்ந்தப்பரமாவது நாம அவங்க சொன்னதக்கேப்போமே..

1 . மொட்டை மாடியும் கிரிக்கெட்டும் - இது இரண்டு வகைப்படும்

a ) மொட்டை மாடியும் ரோடு கிரிக்கெட்டும் - அதாகப்பட்டது ரோட்ல கிரிக்கெட் விளையாடினால் பல கஷ்டங்கள், மத்தவங்க கஷ்டம் நம்ம கஷ்டமா மாறிடும், இல்ல தலைல வெச்சு கட்டிடுடுவாங்க - ரோடு ல போறவங்க வரவங்க மேல ball பட்டாக் குத்தம், பக்கத்துக்கு வீட்டு கண்ணாடி ஒடஞ்சா குத்தம், ball நாய் இருக்கற வீட்டுக்கு போன கஷ்டம், டென்னிஸ் ball அவங்க வீட்டுக்கு போனப்போ கத்தியால வெட்டின அந்த பாட்டிய மட்டும் கிரிக்கெட் விளையாடும் நல்லுலகத்திற்காக மன்னிக்கவே முடியாது .. அதெல்லாம் சரி மொட்டை மாடிக்கும் இதுக்கும் என்னா connection - tottadoin .. Here is the connection .. . அதாகப்பட்டது கண்ணாடி உடையறதும் பக்கத்துக்கு வீட்டுக்குள் ball பொய் விழறதும் பேச்சு பேச்சா இருக்காது, நேர வீட்டுக்கு கம்ப்ளைன்ட் போகும்.. so ஒரு விளையும் பயிர் இப்படியாக முளையிலேயே கிள்ளப்பட்டது, ஆதலினால் தமிழ் படிக்கும் நல்லுலகே - மாடியிலிருந்தே ரோட்ல விளையாடுற கிரிக்கெட் பார்த்து மனசத்தேதிக்க வேண்டியதபோச்சு.. Champions League ல தோத்தோம், World cup ல ஜெயக்கலன்னு எல்லாம் இப்போ சொல்லி ப்ரயோஜனமே கடயாது, இதெல்லாம் 15 வர்ஷங்களுக்கு முன்னாலேயே எழுதப்பட்டது..

b ) மொட்டை மாடியும் underarms கிரிக்கெட்டும் - நிஜ கிரிக்கெட் எ எட்டி நின்னு வேடிக்கை பாத்து பாத்து கேம் எ improvise பண்ணலன்ன நாம பிரச்சனையில்லாம விளையாடற ஒரே கிரிக்கெட், book கிரிக்கெட்மட்டும் than என்கிற ஒரு ஆழ்த்த சுய அனுதபதிலே கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த மொட்டை மாடி underarms கிரிக்கெட். இதோட ரூல்ஸ் ஏ தனி.. One பிட்ச் out first rule, only offside runs , only 2 fielders per team, வெரி இம்போர்டன்ட் நோ ரன்னிங் ரன்ஸ், என்னா மாடி வீட்டு ஆன்டி ஓடற சத்தம் கேட்டா யாரு மாடில ஓடறது னு வந்துடுவாங்க, மத்த ரூல்ஸ் எல்லாம் கொஞ்சம் கேப் ஆனதுநாளே மறந்து போச்சு.. But all that is relevant is here . இதுல மிகப்பெரிய மேட்டர் என்னன்னா ball எ கீழ அடிச்சா batsman than போய் கரும சிரத்தையா எடுத்துட்டு வரணும். மத்த மாலுமிகள் ரோட்ல போற எந்த நல்ல மனுசனும் அந்த ball எ எடுக்காம லைட் ஹவுஸ் வேலை செய்வாங்க.. இதுல நல்ல விஷயங்களையும் நாம சொல்லியாகனும். Earlier generation மொட்டை மாடி கிரிக்கேடேர்ஸ் ரோட்ல நடந்து போனா அந்த ball எ நம்ம மாடிக்கு throw பண்ணுவாங்க, அவங்களோட throwing arm ஓட power பொறுத்து மொட்டை மாடிக்கு வராமல் அது 1st floor , 2nd floor ஆன்டி வீட்டுல பொய் விழாம இருக்கணும், On the other hand ரொம்ப தாண்டிப்போய் பின் வீட்டு லையும் போய் விழாம இருக்கணும், இதெல்லாம் consider பண்ணாம ஆர்வக்கோளாருல எதாவது veteran cricketer ball எ எங்கயாவது தூக்கி அடிச்சிட்டர்னா நமக்குத்தான் கஷ்டம்.. So தன் கையே தனக்கு உதவின்னு ball அடிச்சா உடனே கீழே ஓடிப்போகவேண்டியது தான், இதுல வெந்தபுண் ல வேல் என்னன்னா ball through வா போச்சுன்னா அவுட் வேற.. சச்சின்களும் தோணிகளும் தமிழகத்தில் உருவாகாமல் போனதுக்கு இதுதான் man reason ..

Next day morning மேட்ச் எ வெச்சு night 1 மணி வரை எழுதுவது, அதனால் typos இருந்தால் தயவு செய்து மன்னித்தருளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

A gate way to my மொட்டை மாடி - தொடரும்..

Friday, December 18, 2009

கோபென்ஹகேன் - ஒரு கோனார் உரை.

கோபென்ஹகேன் ஐப்பற்றி எழுத வேண்டிய அவசியமும் அவசரமும் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். Our memory is very short lived. Today s news paper is tomorrows waste paper. இது newspaper க்கு மட்டும் அல்ல நியூஸ் கும் பொருந்தும். அடுத்த நியூஸ் வரும் வரை தான் இந்த நியூஸ் க்கு மவுசு. சமையல் எண்ணை விளம்பரத்தில் வரும் தாத்தா சொல்வது மாதிரி இப்போ கோபென்ஹகேன் பத்தி எழுத வில்லை என்றால் எப்போ எழுதுவது?

எங்கோ பார்த்தது போல், Anagram of the week - Copenhagen - Change .. Nope! இதன் விளக்கம் பின் வரும் பத்திகளில். இன்று இருக்கும் ஒரு super power status உலகில், அண்ணே அமெரிக்க அண்ணே நீங்க வுடற பொகைய கொஞ்சம் குறைசுக்கோங்க, சீனாகார நண்பரே.. நீங்க ரொம்ப ஓவரா தான் பொக வுடறீங்க கொஞ்ச வருஷங்களா, அட நீங்க குறைச்சே ஆக வேண்டும். ஆஸ்திரேலியா அண்ணாச்சி.. நீங்களும் தான்.. அப்படி சொன்னால் ஒலகமே கை கொட்டி சிரிக்கும்.. அடேய்.. நீங்க இத செய்யலை னா நாளைக்கு கை கொட்டி சிரிக்க நீங்களும், உங்களை பார்த்து ரசிக்க நாங்களும் இருக்க மாட்டோம் என்று என்ன தான் நீங்கள் கரடியாக இல்லை மனிதனாகவோ கத்தினாலும் அவர்களுக்கு கேக்காது, புரியாது.. சரி, இது பெரிய்யவங்க சமாசாரம், உலகத்தலைவர்கள் பார்த்துபாங்க என்று விட முடியுமா, I think we have all crossed the time to leave the responsibility to our leaders ..

குளோபல் வார்மிங்கால் 2050 ல் வெப்ப நிலை 2 -5 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் அதனால் ஐஸ் கட்டிகள் உருகி பயமுறுத்தும் ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல், புறநானூற்றில் சொல்வது போல், ஊழிக்காலம் வந்து இப்பூவுலகே நீரின் அடியில் மறையும் அபாயம் உள்ளது. இது ஒன்றும் மிதிகல் சமாச்சாரமோ science fiction ஒ அல்ல. கடலுள் மாய்ந்த பூம்புகார், தனுஷ்கோடி போன்றவை நாம் குளோபல் வார்மிங் phenomenon பற்றி நாம் தெரிந்து உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அழிந்து போன இடங்கள். இவை குளோபல் வார்மிங் ஆல் மூழ்கினவை இல்லை வேறு சில காரணங்களாலா என்பது ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம். இவை போல இன்ன பிற நாடுகளிலும் கடலில் மூழ்கிப்போன நகரங்கள் உண்டு.

Impact உடனே தெரியும் Drink and drive மாதிரியோ அல்லது புகைப்பிடித்தலும் புற்று நோயும் போல cause effect relationship அவ்வளவு தெளிவாக தெரியாதது இந்த குளோபல் வார்மிங் விஷயத்தின் plus அண்ட் minus point. ஒரு வேளை கைல காசு வாய்ல தோசை னு இன்னிக்கு புகை விட்டா நாளைக்கு கடல் நீர் அதிகமானால் அனைவரும் ஒன்று திரண்டு எதாவது செய்திருப்போம், இது slow poison வடிவில் நின்று கொல்வதால் ஒவ்வொருவரும் இந்த மாற்றத்திற்கு நான் விட்டா புகை கரணம் இல்லை.. இது அவன் விட்ட புகையினால் வந்த மாறுதல் என்று மாறி மாறி கை காண் பித்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்கா காரனும் ஐரோப்பா காரனும் விட்ட புகை ஏனோ பாவம் ஏதுமறியாத அன்டர்டிக்காவைப்போய பதம் பார்த்து விட்டு வருகிறது.. அங்கே தான் ozone layer maximum பழுதடைந்ததாக சொல்கிறார்கள். இதே இந்த விளைவு அந்த, அந்த நாடுகளில் வந்தால் மக்களுக்கு ஒரு பயம் இருக்கும், மாற்றத்தைக்கொண்டு வருவது ஒரு அளவிற்கு easy.இவை தான் தன்னலத்திற்காக பொதுசொத்தை நாசப்படுத்தும் "tragedy of the commons".

ஏன் கோபென்ஹகேன் ல் மாற்றம் ஏதும் நிகழாது என்றால் புகை விடும் ஓட்டப்போட்டியில் முதலில் சேர்ந்த அமெரிக்கா, ஐரொப்பா போன்ற நாடுகள் இப்போது தான் recession ஐ விட்டு எழுந்து வருவதாக தத்தம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர், அப்போது தான் அங்கே நாற்காலிகள் பிழைக்கும், aggregate demand, industrial output இவையெல்லாம் உயரும். குளோபல் வார்மிங்ன் impact, எங்கோ science fiction படங்களில் வருவது போல வருவதால் மக்களுக்கும் even தலைவர்களுக்கும் புரிந்தாலும் ஏனோ கையால் சூரியனை மறைத்துக்கொண்டு இருண்டுவிட்டது என்று சொல்லவேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.. இந்தியா போன்று லேட் அக complan குடித்து விட்டு வளரும் நாடுகளோ வளர்ந்த நாடுகளைப்பார்த்து 200 -300 ஆண்டுகளாக புகை கக்கி சூப்பர் பவர் ஆக சுற்றி வந்த நீங்கள் எங்கள் வளர்ச்சியை (புகை = வளர்ச்சி) குறைத்துக்கொள்ள சொல்வது அநியாயம். Recession மற்றும் national demand க்காக நாங்களும் புகை விடும் industrial output ஐ குறைத்துக்கொள்ள முடியாது. முதலில் maximum புகை விடும் அமெரிக்க வும் சீனாவும் முன் வரட்டும் என்று சொல்கின்றன.. இந்த நிலைமையிலும் புகை விடாத டெக்னாலஜி ஐ free ware போல ஷேர் செய்ய வளர்ந்த நாடுகள் காட்டும் தயக்கம் தன்னலத்தின் உச்சகட்டம். Everyone is passing the buck. So கோபென்ஹகேன் பல நாட்டுத் தலைவர்களும் 10 -15 நாட்கள் கூடிப்பேசி என்ன கிழிச்சீங்க என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்ற காரணத் திர்க்காகவே எல்லாத் தலைவர்களுக்கும் பொருந்தும் விதமாக பல் புடுங்கிய ஒரு version of draft ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் என்று விஷயம் தெரிந்தோர் பேசிக்கொள்கிறார்கள். இதனால் தான் copenhagen - Change - Nope என்று ஆகிவிட்டது.

பல மாற்றங்களை people to people முறையில் மட்டுமே செயல் படுத்த முடியும். Government களால் முடியாத பல மாற்றங்களை civil society கள் சாதித்திருக்கின்றன. உலகெங்கிலும் ஒரு கையெழுத்து போராட்ட்டம் போல மக்கள் பலரையும் ஈடு படுத்தி விழிப்புனணர்வு ஏற்படுத்துவது கையால் ஆகாத பல உலகத்தலைவர்களை ஓரமாக தள்ளிவிட்டு நாம் முன்னேர்வதற்கான ஒரே வழி.

மக்கள் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் யாவை.. இந்தியா போன்ற வளரும் நாடுகள் emission அதிகமுள்ள filament பல்பு பயன்படுத்தாமல் CFL லைட் பயன்படுத்தலாம் (பல நாடுகளில் பல்புகள் ban செய்யப்பட்டுள்ளன), அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் cheese burger சாப்பிடுவதை குறைப்பது கூட குளோபல் வார்மிங் ஐ கட்டுபடுத்த உதவும். மாட்டு தீவனத்தில் மற்றம் செய்தல் முதல் airconditioner, car போன்றவற்றை குறைவாக உபயோகிப்பது, மரம் நடுவது, மாமிசம் உண்ணாமல் இருப்பது, பேன் லைட் உபயோகப்படாத போது சுவிட்ச் ஆப் செய்வது வரை common man செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. மேலும் பல தகவல்களை நம் நண்பர் google அவர்கள் மறைக்காமல் வைத்துள்ளார், how to reduce global warming என்று keyboard ஐ தட்டுங்கள் திறக்கப்படும் பல உண்மைகள். இதில் நீங்கள் note செய்யவேண்டிய ஒன்று உள்ளது. இங்கே குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் நம் பெற்றோர்களும் அவர்கள் பெற்றோர்களும் சொல்லிக்கொண்டு வந்தவை தான், technology related விஷயங்கள் தான் இவற்றில் புதியவை. இவற்றில் பல நாம் பள்ளிக்கூட பாடங்களாகப் படித்தவை தான். நாம் தான் இவற்றை எல்லாம் தாண்டி நாம் வளர்ந்து விட்டோம் என்று தவறாக நினைத்துவிட்டோம்.

மழையும் நகரமும்

ஏனோ நம்ம சிட்டி மக்களுக்கு மழைனா ஒரு allergy , இருக்காதா பின்னே, ரோடின் ரெண்டு ஓரத்திலையும் தண்ணி, பாத சாரிகள் வண்டி ஓட்டுவோர் அனைவரும் அந்த median இல்லாதா ரோடின் நடுவே எறும்பு ஊர்வது போல ஒருவர் பின் ஒருவராக, மாட்டு வண்டியும் மாருதி காரும் ஒரே வேகத்தில் போக வைக்கும் .. மழை, The universal Leveller .

மக்களை சொல்லி குற்றம் இல்லை, ஏனோ நம் தெருக்கள் மழையே பெய்யாது என்ற ஒரு நம்பிக்கையில் கட்டப்பட்டவை போல, பெருவாரியான தெருக்களில் மழை நீர் தேங்கியே நிற்கும், மழை நீர் ஆட்டோமாடிக் ஆக சாக்கடையில் தான் பொய் சேர வேண்டும் என்பது அந்த மழை நீரின் விதி போலவும் தேங்கி நின்று போவோர் வருவோரின் டிரெஸ்ஸை வீணாக்குவது என்பது வானத்திலிருந்து கீழே விழுந்து மாண்டு போய் சாந்தி அடையாத அம்மழை நீரின் ஆவி (இது தான் நீராவியோ? ) பழி வாங்குவது போல தோன்றும்.. போகும், வரும் வாகனங்கள் டயர் வழியாக வண்டிகள் போகும் இடத்துக்கு மழை நீரை distribute செய்தே ஓரிடத்தில் இருக்கும் மழை நீரை போக்க வேண்டும. Here too மழை plays a big leveller

ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவர் கூட தட்ப வெட்ப நிலை கேட்பார், எனக்கு ஏனோ இது புரியாத புதிர், கூகிள் சர்ச், rippleys believe it or not மாதிரி எதாவது ஒன்றில் அப்படியே weather report உண்மையாக பலித்திருக்கிறதா என்று தேடிதான் பார்க்க வேண்டும். பாவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், ரொம்ப சமுதாய அக்கறையோடு ஸ்கூல் லீவு விடுவார். அன்று ஏனோ வருண பகவன் teka குடுத்து விட்டு நக்கலாக சிரிப்பார் இவர்களை பார்த்து .. பள்ளி குழந்தைகள் எதோ அவரவர் வசதிக்கு கில்லி, கோலி, பேப்பர் கப்பல், கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், creche என்று பல வேலைகளில் பிஸி ஆகி விடுவர். பசங்க ஸ்கூல் லீவ் என்று திரும்பி வீட்டுக்கு வந்து என்ன செய்கிறார்கள் என்று ஆபீஸ் ல் இருக்கும் parents மண்டை உடைத்து கொண்டிருப்பார்..

விக்ரமே பாடிவிட்டார், திருநெல்வேலி அல்வா டா.. சென்னையிலே என்னடா தண்ணி பஞ்சம் கூட இல்ல டா னு.. ஒரு ஐந்து வருஷங்களாக rain water harvesting கோயில் குளம் தூர் வாரல் போன்ற நடவடிக்கைகளால் சிட்டி யில் வாட்டர் டேபிள் கொஞ்சம் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் இல்லாவிட்டாலும் நம் மக்கள் அந்த மெட்ரோ வாட்டர் லாரி பின்னல் நீண்ட queue வை மறந்திருக்க மாட்டார்கள், ஆனாலும் ஏனோ மழை வந்தால் ஒரு எரிச்சல், கிரிக்கெட் ல் இந்திய வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால் இருக்கும் ஒரு பீலிங்.. சே என்ன டா இவுங்க ஜெயச்சுகிட்டே இருக்காங்க,, அந்த மாதிரி மழை பெயஞ்சுட்டே இருக்கு என்ற ஒரு சந்தோஷம் கலந்த ஒரு அலுப்பு..

பசங்க ஸ்கூல் லீவு விடறது வேற matter நமக்கே ஆபீஸ் லீவ் விடுவாங்களா ? எதாவது நியூஸ் சேனல் ல இன்று சென்னையில் அனைத்து கம்பெனி களும் மழை காரணமாக மூடியே இருக்கும் என்று ஒரு G Oனு ஒரு நியூஸ் தேனாக காதில் வந்து பாய எவ்வளவு பேர் வெயிட் பண்ணியிருக்கீங்க, மாத்தி மாத்தி டிவி சேனலையும் ஜன்னல் வெளியே மழையும் பார்க்கும் அந்த காத்திருத்தல் சுகம், அடா அடா.. கடைசியில் இந்த பகல் கனவெல்லாம் பலிக்காது, பேசாம மழை நின்ற gap ல ஆபீஸ் கிளம்பறது தான் பெட்டெர் என்று ஒரு ஞான உதயம் வந்து, வண்டியை ஓங்கி ஒரு உதை விட்டு கிளம்பும் அந்த காலை வேளை.. எதோ லவர் காக காத்திருந்ததை பத்தி எல்லாம் ரொம்ப பேரு நிறைய ரௌசு விடுவாங்க,, இதை பார்க்கும்போது அதெல்லாம் ju ju pi

மழை வந்தால் ஒரே குடையில் ஜோடியாக போகலாம் என்கிற ஒரு hidden agenda நிறைவேறும் வாய்ப்பு வரும், உடனே உங்களுக்கு மரீனாவில் மதியம் ஒரு மணி வெய்யிலில் குடையில் இருக்கும் ஜோடி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.. என்ன இருந்தாலும் மழையில் ஒரு குடையின் கீழ் இருக்கும் ஜோடி.. அந்தி மழைபொழிகிறது .. பாட்டெல்லாம் பாடிக்கொண்டே போகலாம், இதெல்லாம் பாவம் நம் மரினா பீச் வெய்யில் ஜோடிகளுக்கு சாத்தியம் இல்லை, நண்பர்கள் யாரேனும் வெய்யில் குடை டூயட் சாங் இருந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும், அது காதலோ என்ன கண்றாவியோ எதுவா இருந்தாலும் வாழ வைக்கலாம்..

மழை துளிகள் தொடரும்..

Saturday, August 23, 2008

Started Swimming!

Hey congrats on your book!! All the best for it & u to do well.

I was like a hesitant novice having shivers before getting into a swimming pool, for getting into blogging, nothing else, u thot it was something else, probably the build up was too high there.

Not sure if it was 2004 or 5 surely not 6 when this (to blog) idea blossomed, (the poor idea dint know it was soon to be nipped). I m having some enthu & encouragement reading through ur posts. I m new to blogging( both writing & reading blogs). Have not read (m)any of them, I may have but I dont remember or recollect anything except couple of my friends' blogs.

I was wondering now that u ve become a novelist and published ur book, wd you still continue ur blogging? or let me put it this way- still leave ur words for free on the net.. or would u think you are wasting ur words which, if saved for another platform (read: book) would not go into the millions of bytes consuming the blogosphere for free!

Take your time, if you consider its worth replying pls do. I wd not ve stumbled on your blog but for ur book release ads, i think the ads work better for ur blogs than for d book, nevertheless interest in one wd fuel the interest in the other.

Cheers
VVK

PS:The subject is made to appear more impressive with no connection to the text of this email just to make sure this mail does not get lost in all the congratulatory email messages yu wd ve received.
Best of Luck once again, I really enjoyed reading ur blogs, shall try to lay my hands on ur book.